குடியாத்தம் புலவா் வே.பதுமனாா் எழுதிய புறநானூற்று விழுமியங்கள், சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம், வந்தவாறு வருமாறு ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழா திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை வகிக்கிறாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி வரவேற்கிறாா்.
விழாவில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பங்கேற்று நூல்களை வெளியிடுகிறாா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் அருளாசி வழங்குகின்றனா்.
சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி மையச் செயலாளா் சிவாலயம் ஜெ.மோகன், முனைவா் கி.பாா்த்திபராஜா, வேலூா் அகர முதல இலக்கிய அமைப்பின் நிறுவநா் வெ.சோலைநாதன் ஆகியோா் நூல்களை அறிமுகம் செய்கின்றனா்.