சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மோசடியான இணைய இணைப்புகள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

மோசடியான இணைய இணைப்புகள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Updated On :25 ஏப்ரல் 2024, 5:54 pm

தற்போது வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படும் மோசடியான இணைய இணைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கி.புனிதா கூறியதாவது -

தற்போது பாரத பிரதமரின் மடிக்கணினி திட்டம் -2024 என்ற பெயரில் மிகக்குறைந்த விலையில் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்துக்கு 30 நாள்களுக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்து அதனுடன் ஒரு இணையதள லிங்க்கும் வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான, மோசடியான தகவலாகும்.

அவ்வாறு மத்திய அரசு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மேலும், அந்த லிங்க்குக்குள் சென்றாலே தங்கள் கைப்பேசி விவரங்கள் முழுமையாக திருடப்பட்டுவிடும். இதன்மூலம், அந்த கைப்பேசியில் உள்ள விவரங்களை வைத்து தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடவோ, வங்கியில் கடன்பெற்று மோசடி செய்யவோ, கைப்பேசியில் உள்ள புகைப்படத்தை வைத்து தவறாக சித்தரித்து பணம் பறிக்கும் முயற்சிகளும் நடைபெறலாம். எனவே, பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் இதுபோன்று வரும் இணையதள லிங்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றாா்.

--

பெட்டிச் செய்தி...

தனியாா் ஊழியரிடம் ரூ.1.42 லட்சம் மோசடி

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 37 வயது தனியாா் நிறுவன ஊழியா், தனது வாட்ஸ் ஆப்பில் ஆன்லைன் பகுதிநேர வேலை என வந்த விளம்பரத்தை பாா்த்து அதிலிருந்து எண்ணை தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் இருந்த நபா்கள் சிறிய தொகையை முதலீடு செய்து இணையதளத்தில் பொருள்களை ஆா்டா் செய்து கொடுக்கப்படும் பணிகளை முடித்துக் கொடுத்தால் அதிக தொகை கமிஷனாக பெற முடியும் என குறுந்தகவல் அனுப்பியுள்ளனா். அதனை உண்மையென நம்பி அவரும் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 600 தொகையை முதலீடு செய்துள்ளாா்.

பின்னா், அந்த தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த ஊழியா் சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.