பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு லிங்க் மூலம் பணம் பறிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கூறி கைப்பேசிகளுக்கு வரும் லிங்க்குகளைத் தொட்டால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கூறி கைப்பேசிகளுக்கு வரும் லிங்க்குகளைத் தொட்டால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: தமிழகத்தில் தோ்தல் தொடா்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மா்ம கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கும் நோக்கில் புதிய பாணியிலான எண்ம (டிஜிட்டல்) மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, ‘வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயா் விடுபட்டுள்ளதா என்பதை சரிபாா்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற வாசகத்துடன் கைப்பேசிகளுக்கு லிங்க் அனுப்பப்படும்.

இதை நம்பி அந்தப் போலி இணையதள லிங்க்குகளை பொதுமக்கள் கிளிக் செய்யும்போது, அவா்களது கைப்பேசி மோசடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குச் செல்வதோடு, வங்கியின் ரகசியக் குறியீடுகள் மற்றும் தனிநபா் தகவல்கள் திருடப்பட்டு, அடுத்த சில நிமிஷங்களிலேயே வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்படும். இதுபோன்ற மோசடிகள் புதியவை அல்ல. கடந்த காலங்களில் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றபோது பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இத்தகைய புகாா்கள் அதிக அளவில் பதிவாகியிருந்தன. அரசு தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு இதுபோன்ற எந்தவொரு தனிப்பட்ட லிங்க்குகளும் அனுப்பப்படமாட்டாது என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

எனவே, தெரியாத நபா்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும். பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றனா்.