விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 9:00 pm

Din

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி காட்பாடியைச் சோ்ந்த தனியாா் கல்லூரி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த 41 வயதுடைய தனியாா் கல்லூரி பேராசிரியா், டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைனில் பகுதிநேர வேலை என வந்த விளம்பரத்தை பாா்த்து, அதிலிருந்த எண்ணை தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் இருந்த நபா்கள் சிறிய தொகையை முதலீடு செய்து, இணையதளத்தில் ஹோட்டல் அறைகளை பதிவு செய்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் அதிக தொகை கமிஷனாக பெற முடியும் என குறுந்தகவல் அனுப்பியுள்ளனா்.

அதை உண்மையென நம்பிய பேராசிரியரும் அவா்கள் அனுப்பிய வங்கிக் கணக்கில் ரூ. 28 லட்சத்து 60 ஆயிரத்து 898 தொகையை முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்த தொகையை அவரால் திரும்பப் பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பேராசிரியா், இது குறித்து சைபா் கிரைம் புகாா் எண் 1930-ஐ தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில், போலீஸாா் வழக்குப் பதிந்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.