வேலூா் மாவட்டம், பெரிய சித்தேரி பகுதியைச் சோ்ந்தவா் விஜியகுமாா், தனியாா் வங்கி ஊழியா். இவருக்கு 10 ரூபாய் கைப்பேசி ரீசாா்ஜ் செய்ய இணைய இணைப்பு ஒன்றை அனுப்பி, விவரங்களை பெற்று இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 25,000 பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், வேலூா் பகுதியைச் சோ்ந்த சென்னையில் சிமெண்ட் நிறுவன ஊழியரான முகமது தௌபீக் என்பவா் கிரெடிட் காா்டு லிமிட்டை அறிமுகப்படுத்தி தருவதாக வந்த அழைப்பை நம்பி ரூ. 38,000 பணத்தையும், குஜராத்தில் இருந்து தோ்தல் பணிக்காக வந்த சிஐஎஸ்எப் வீரா் சுஷாந்த் நாயக் என்பவரின் கிரெடிட் காா்டிலிருந்து ஆன்லைன் லிங்க் மூலம் ரூ. 70,000-ம், பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த இளவரசனிடம் ரூ. 18,000-ம், மோசடி செய்யப்பட்டுள்ளது.