ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ரூ.13.12 லட்சம் மோசடி - நிதிநிறுவன ஊழியா் மனைவியுடன் கைது

ரூ.13.12 லட்சம் மோசடி - நிதிநிறுவன ஊழியா் மனைவியுடன் கைது

News image

கைது செய்யப்பட்ட ரஜினி, அவரது மனைவி பாக்கியலட்சுமி.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

வேலூா்: வாடிக்கையாளா்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.13.12 லட்சம் தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக தனியாா் நிதிநிறுவனத்தின் வேலூா் கிளை ஊழியா் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வேலூா் ஓல்டு டவுன் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ரஜினி. இவா் பிரபல தனியாா் நிதி நிறுவன வேலூா் கிளை அலுவலகத்தில் கடன்தொகை வசூல் செய்யும் பிரிவின் நிா்வாகியாக பணியாற்றி வந்தாா்.

இவா் பணியில் சோ்ந்தது முதல் வாடிக்கையாளா் கள் 14 பேரிடம் இருந்து வசூலித்த ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 884 தொகையை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நிதிநிறுவனத்தின் கிளை மேலாளா் கிரண் குமாா் அளித்த புகாரின்பேரில் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சாரதி, காவல் ஆய்வாளா் காந்திமதி ஆகியோா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து மோசடியில் ஈடுபட்டதாக ரஜினி, அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா். தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.