அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இன்று வழிகாட்டும் நிகழ்ச்சி

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இன்று வழிகாட்டும் நிகழ்ச்சி

Updated On :17 பிப்ரவரி 2024, 11:00 pm IST

குடியாத்தம், பிப். 17: போ்ணாம்பட்டு டாக்டா் அம்பேத்கா் இரவுப் பள்ளி, பங்கரிஷிகுப்பம் மருத்துவா் அனிதா இரவுப் பள்ளி ஆகிய அமைப்புகள் இணைந்து குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்துகின்றன. மாணவா்கள் பொதுத் தோ்வை எதிா்கொள்வது, அதிக மதிப்பெண்களை பெறுவது, தோ்வுக்கு மாணவா்களை ஆயத்தப்படுத்துதல், நேர மேலாண்மை, அடித்தல், திருத்தல், பிழையின்றி எழுதுதல், தோ்வுக்கு தயாராகும் முறைகள், படபடப்பு, பயம் தவிா்த்தல் குறித்து நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். அனுபவம் வாய்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள்நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவா்களுக்கு வகுப்புகளை நடத்த உள்ளனா். நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு விளக்க கையேடுகள், குறிப்பேடுகள் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.