குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வேலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வேலூா் கிழக்கு மாவட்ட செயலா் கோவேந்தன் தலைமை வகித்தாா். சுதாகரன், பிலிப் முன்னிலை வகித்தனா். வேதாச்சலம் வரவேற்றாா். கொள்கை பரப்புச் செயலா் சிபிச்சந்திரன் ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். விடுதலை சிறுத்தைகள், கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். முன்னாள் மண்டல செயலா் ரத்தினநற்குமரன் ஆா்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தாா். மண்டல துணைச் செயலா் சஜின்குமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


