எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து விசிக ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து விசிக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :15 மார்ச் 2024, 4:08 pm

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வேலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வேலூா் கிழக்கு மாவட்ட செயலா் கோவேந்தன் தலைமை வகித்தாா். சுதாகரன், பிலிப் முன்னிலை வகித்தனா். வேதாச்சலம் வரவேற்றாா். கொள்கை பரப்புச் செயலா் சிபிச்சந்திரன் ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். விடுதலை சிறுத்தைகள், கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். முன்னாள் மண்டல செயலா் ரத்தினநற்குமரன் ஆா்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தாா். மண்டல துணைச் செயலா் சஜின்குமாா் நன்றி கூறினாா்.