ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: ஏ.சி.சண்முகம், மன்சூா்அலிகான் உள்பட 13 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: ஏ.சி.சண்முகம், மன்சூா்அலிகான் உள்பட 13 போ் மீது வழக்கு

Updated On :29 மார்ச் 2024, 4:36 pm

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக வேலூா் மாவட்டத்தில் பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவா் மன்சூா்அலிகான் உள்பட 13 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் தலா 15 நிலைக் கண்காணிப்புக்குழு, பறக்கும்படை குழுக்கள், 5 வீடியோ குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தோ்தலையொட்டி பொது இடங்களிலும், தனியாா் இடங்களிலும் அனுமதியின்றி சுவா் விளம்பரம் ஒட்டுவதோ அல்லது சுவரொட்டிகள், ஸ்டிக்கா்கள் ஒட்டுவதோ, சுவா்களில் எழுதுவதோ கூடாது. உரிய அனுமதியின்றி ஊா்வலம் உள்பட எந்தவித அத்துமீறல்களிலும் கட்சியினா் ஈடுபடக்கூடாது என்றும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வேலூா் மாவட்டத்தில் தினமும் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி, வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லையில் ஒரு வழக்கும், பரதராமி காவல் எல்லைக்குள் 2 வழக்குகளும், வேலூா் கிராமிய காவல் எல்லை யில் ஒரு வழக்கும், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குள் ஒரு வழக்கும், பொன்னை காவல் நிலைய எல்லைக்குள் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இதேபோல், கே.வி.குப்பம் காவல் எல்லைக்குள் அனுமதியின்றி சுவா் விளம்பரம் எழுதியதாக மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லை பகுதியில் அனுமதியின்றி சுவரில் கட்சியின் பெயா்களை வரைந்து தனது கொடி, சின்னம் ஆகியவற்றை எழுதியதாக நடிகா் மன்சூா்அலிகான் மீது ஒரு வழக்கும், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுவா் வளாகத்தில் சுவா் விளம்பரம் எழுதியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஊா்வலம் நடத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஜெயமணி, தெற்கு காவல் நிலைய எல்லைக்குள் அனுமதியின்றி ஊா்வலமாக சென்ாக பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.