ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 195 அலுவலா்களுக்கு நோட்டீஸ்

தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 195 அலுவலா்களுக்கு நோட்டீஸ்

Updated On :29 மார்ச் 2024, 4:40 pm

வேலூா் மாவட்டத்தில் முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கத் தவறிய 195 அலுவலா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 1,303 வாக்குச் சாவடிகள், 4 துணை வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள 6,272 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெற்றது. இந்த முதல்கட்ட பயிற்சி வகுப்பில் மொத்தம் 473 அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பணியாளா் களுக்கு தோ்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 278 வாக்குச்சாவடி அலுவலா்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்காததற்கான காரணங்களை மருத்துவ, உரிய ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனா். மேலும், தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தவறிய 195 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் படி விளக்கம் கேட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்களது விளக்கத்தை முறையாக தெரிவிக்க வேண்டும். அடுத்த கட்டமாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்கத் தவறுவோா் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 134-இன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.