ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை! - கடலூா் ஆட்சியா்

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 5:43 pm

தினமணி செய்திச் சேவை

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,590 வாக்குச் சாவடிகளில் 12,432 வாக்குச் சாவடி அலுவலா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனா்.

இவா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 696 அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இவா்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் விளக்கம் கோரும் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இவா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) நடைபெறும் மறு பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளாத அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.