வேலூர்: வேலூர் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 3 இளைஞர்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையை தொடர்ந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
இதையும் படிக்க : தில்லி எய்ம்ஸில் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள்!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே இரவு 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 3 இளைஞர்கள், சிறுமியின் வாயை மூடி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வீரப்பன் (28), இளமதன் (28), சின்னராசு (30).ஆகிய மூன்று பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பின்னர் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு தலா 20 ஆண்டுகள்; ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



