முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

வேலூர்: சிறுமியை வல்லுறவு செய்த 3 இளைஞர்கள் கைது!

வேலூரில் சிறுமியை வல்லுறவு செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டது பற்றி...

News image

கைது செய்யப்பட்ட இளைஞர்கள். - Din

Updated On :20 நவம்பர் 2024, 3:59 pm IST

வேலூர்: வேலூர் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 3 இளைஞர்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையை தொடர்ந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே இரவு 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.

அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 3 இளைஞர்கள், சிறுமியின் வாயை மூடி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வீரப்பன் (28), இளமதன் (28), சின்னராசு (30).ஆகிய மூன்று பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பின்னர் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.