தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதற்காக சென்ற நோயாளிக்கு 3 ஆண்டுகள் கழித்து தேதி கொடுக்கப்பட்டுள்ளது.
தில்லியை சேர்ந்த ஜெய்தீப் தே (வயது 52) என்பவர் வலது கால் காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளார்.
ஆனால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்கான தேதி 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 15,000 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு எம்.ஆர்.ஐ., எக்ஸ் ரே ஸ்கேன் போன்றவை எடுக்கப்படுகிறது.
இதனால், புறநோயாளிகளுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகள் வரை உள்ளதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெய்தீப் கூறுகையில், “தில்லி மற்றும் வலையப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ரூ. 25,000 வரை கேட்கின்றனர், ரூ. 5,000 கூட செலவழிக்க முடியாது நிலையில் நான் உள்ளேன். என்ன செய்வதென்று தெரியாததால், ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ. 2,000 முதல் ரூ. 3,000-க்குள் குறைந்த எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை தரப்பில் கூறுகையில், “ஸ்கேன் எடுக்க அதிகளவிலான நோயாளிகள் வருவதால் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் உடனடி ஸ்கேன் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப பிற உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு காத்திருப்பு காலம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்

தில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்

15 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி

எய்ம்ஸ் இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



