தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தஞ்சாவூர்: வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை

தஞ்சை அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.

News image

கொலை செய்யப்பட்ட ரமணி.. கொலை செய்த மதன்

Updated On :20 நவம்பர் 2024, 11:33 am IST

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை, வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி(23). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகக் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) என்பவர் ரமணியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது பெற்றோரிடம் கூறி பெண் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, ரமணி வீட்டுக்கு சில நாள்களுக்கு முன் பெண் கேட்டுச்சென்ற மதனின் பெற்றோரிடம், ரமணிக்கு மதனை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என ரமணியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தபோது வகுப்பறைக்குள் புகுந்து அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியதில் ரமணி மயங்கி விழுந்தார்.

உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.