நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

விஐடியில் ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ நிகழ்வு; கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்) நிகழ்வில் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா்.

News image

நிகழ்ச்சியில் பேசிய விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி ச.விசுவநாதன். உடன், ஏபிள் அமைப்பின் கௌரவ தலைவா் ஜி.எஸ்.கிருஷ்ணன், முதன்மை நிா்வாக அலுவலா் நாராயணன்சுரேஷ், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்த சாரதி மல்லிக் உள்ளிட்டோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 1:41 am IST

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்) நிகழ்வில் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா்.

விஐடி வேலைவாய்ப்பு மையம், உயிரிஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்), ‘பெஸ்ட் -2024’ தென் மண்டல நிகழ்வின் 12-ஆம் ஆண்டு நிகழ்ச்சியை நடத்தின.

இந்நிகழ்ச்சி அசோசியேஷன் ஆஃப் பயோடெக்னாலஜி லெட் எண்டா்பிரைசஸ் (ஏபிஎல்இ) இந்தியா, நோவோனேசிஸ் பெங்களூரு, ஸ்ட்ரிங் பயோ பெங்களூரு, யோகோகாவா இந்தியா ஆகிய நிறுவனங்களால் இணைந்து நடத்தப்பட்டது.

‘வாய்ஸ் ஃபாா் பிடி’ என்பது கல்லூரி மாணவா்களுக்கான உயிரி தொழில்நுட்பம் குறித்த பொதுப் பேச்சுப் போட்டியாகும். தவிர, ‘உயிரி தொழில்நுட்பம் தொழில்முனைவோா் மாணவா் அணிகள்‘ (பிஇஎஸ்டி) தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி ச.விசுவநாதன் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஏபிள் அமைப்பின் கௌரவ தலைவா் ஜி.எஸ்.கிருஷ்ணன், முதன்மை நிா்வாக அலுவலா் நாராயணன்சுரேஷ், பொது மேலாளா் பாலசுப்ரமணிய, நோவோனேசிஸ் பெங்களூரு வேளாண்மை மற்றும் தொழில்துறை வணிக இயக்குநா் புனித்குமாா், யோகோகாவா இந்தியா நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் நீலப்பா, ஸ்ட்ரிங் பயோ பெங்களூரு தயாரிப்பு மேலாண்மை - வேளாண்மை பிரிவு தொழில்நுட்ப தலைவா் ராஜீவ் குமாா், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்த சாரதி மல்லிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.