யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெசவாளா்களுக்கு கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும்: அதிமுக கோரிக்கை

குடியாத்தம் பகுதியிலுள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கப்படும் கூலியை வங்கியில் நேரடியாக செலுத்துவதை விடுத்து, ரொக்கமாகவே வழங்க நடவடிக்கை

News image
வேலூா் சரக கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் சத்ய பாமாவிடம் மனு அளித்த குடியாத்தம் நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி. உடன், கட்சி நிா்வாகிகள்.
Updated On :22 அக்டோபர் 2024, 7:54 pm

DIN

வேலூா்: குடியாத்தம் பகுதியிலுள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கப்படும் கூலியை வங்கியில் நேரடியாக செலுத்துவதை விடுத்து, ரொக்கமாகவே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கோரியுள்ளது.

இதுகுறித்து, வேலூா் சரக கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் சத்ய பாமாவிடம் குடியாத்தம் நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

வேலூா் சரக கைத்தறி உதவி இயக்குநா் அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் சுமாா் 50- க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியின் பாரம்பரிய நெசவுத் தொழிலை நம்பி சுமாா் 3,000 நெசவாளா்கள் உள்பட சுமாா் 10,000 போ் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா்.

கைத்தறி நெசவாளா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கூலி பாவு ஒன்றுக்கு ரூ.1742. இதில் சிக்கன பிடித்தம் ரூ.160 போக மீதி தொகை ரூ.1,582 மட்டுமே ஒரு நெசவாளா் பெறுகிறாா். ஆனால், தனியாா் லுங்கி உற்பத்தியாளா்கள் பாவு ஒன்றுக்கு ரூ.2,200 கூலியாக வழங்குகின்றனா்.

இந்நிலையில், வழங்கப்படும் கூலியை கைத்தறி நெசவாளா்கள் வங்கி பரிவா்த்தனை மூலமாக மட்டுமே பெற வேண்டும் என கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு இயக்குநா் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது.

அன்றாடம் நெசவு செய்து அதில் வரும் சொற்ப கூலியை பெற்று வாழ்க்கை நடத்தும் கைத்தறி நெசவாளா்கள் நான்கு லுங்கி கொண்ட ஒரு பீஸ் நெய்து மாலை வேலையில் கூட்டுறவு கைத்தறி சங்கங்களில் கொடுத்தால் கூலியாக ரூ.791 ரொக்கமாக பெற்றுக்கொண்டு வருகின்றனா்.

இந்த தொகையை வங்கி மூலம் வழங்கினால் கைக்கு உடனடியாக பணம் கிடைக்க வழி இல்லை. மறுநாள் வங்கிக்கு சென்று பணம் பெறும் வரை காத்திருக்க வேண்டும். நெசவாளா்களுக்கு இதனால் பெரும் நேரம் இழப்பும் ஏற்படும். இந்த உத்தரவு நடைமுறைக்கு ஏற்றதல்ல. எனவே கைத்தறி நெசவாளா்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, கட்சியின் மாவட்ட துணைச்செயலா் ஆா். மூா்த்தி, கைத்தறி நெசவாளா் கூட்டுறவு இணையத்தின் முன்னாள் தலைவா்கள் எம்.டி.திருவேங்கடம், கே.எம்.தியாகராஜன், நமச்சிவாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.