தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலூரில் செப். 23-இல் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி மேளா

வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி மேளா வரும் 23-ஆம் தேதி வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 12:05 am

Din

வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி மேளா வரும் 23-ஆம் தேதி வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு திறன்மேம்பாடு தொழில்முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இணைந்து வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி மேளா 23-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலூா், அப்துல்லாபுரம், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடத்த உள்ளன.

இம்முகாமில் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்குபெற்று தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா். எனவே, இந்த முகாமில் ஐ.டி.ஐ. (என்டிசி, எஸ்சிவிடி, சிஓஇ), எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் தோ்ச்சி, தோல்வியடைந்தவா்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு 40 வயது, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 0416 - 2290348 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.