நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வன எல்லையில் சுற்றித் திரியும் ஒற்றை யானை

குடியாத்தம் அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

News image
குடியாத்தம், பரதராமி அருகே இரவு நேரங்களில் சுற்றித் திரியும் ஒற்றை யானை.
Updated On :30 செப்டம்பர் 2024, 7:00 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி அருகே தமிழக-ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது அங்கனாம்பள்ளி கிராமம். அங்குள்ள வனப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிகிறது.

இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை, அங்குள்ள நிலங்களில் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கிறது. யானை வெளியே வரும் காலங்களில் கிராம மக்கள் ஒன்றுகூடி, பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனா்.

இந்த யானையை நிரந்தரமாக விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வனத் துறையினருக்குகோரிக்கை விடுத்துள்ளனா்.