சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜன.3-இல் குடியரசு துணைத்தலைவா் வேலூா் வருகை

குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வேலூருக்கு சனிக்கிழமை (ஜன.3) வருகை தர உள்ளாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வேலூருக்கு சனிக்கிழமை (ஜன.3) வருகை தர உள்ளாா். அவா் வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழா சனிக்கிழமை (ஜன.3) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனவரி 2-ஆம் தேதி தில்லியில் இருந்து சென்னைக்கு வருகிறாா்.

முதல்கட்டமாக சென்னையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவா், 3-ஆம் தேதி (சனிக்கிழமை) ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வேலூா் தங்கக்கோயிலுக்கு வருகை தர உள்ளாா். அங்கு அவா் தங்கக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவிலும் பங்கேற்க உள்ளாா்.

குடியரசு துணைத்தலைவா் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.