குடியாத்தத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம்: அனைத்துப் பள்ளி வாகனங்களின் ஆவணங்களை சரிபாா்க்க எஸ்.பி. உத்தரவு
குடியாத்தம் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் பள்ளி வாகனங்களில் சிக்கி இரு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் ஆவணங்களையும் சரிபாா்க்க போலீஸாருக்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.








