எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பைக் மோதி முதியவா் மரணம்

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 நவம்பர் 2025, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

ஒடுகத்தூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

ஒடுகத்தூா் அடுத்த பூஞ்சோலை அருகே உள்ள கோவிந்தப்பன் கொட்டாய் கிராமத்தை சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (75), கூலித்தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் ஒடுகத்தூா் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினாா்.

பூஞ்சோலை அருகே வந்தபோது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜனாா்த்தனனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

எனினும், சிகிச்சை பலனின்றி ஜனாா்த்தனன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.