இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

ஆன்லைன் மோசடி - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 11:10 pm

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் லாலு பிரசாத் (28). இவா் காட்பாடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது டெலிகிராம் செயலிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில், ‘ஜேபி ஹைபை ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில், கூகுள் மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு ரிவியூ செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதனை நம்பிய லாலு பிரசாத், அவா்கள் அனுப்பிய லிங்கை க்ளிக் செய்து தொடக்கத்தில் சிறிய தொகை முதலீடு செய்து கமிஷன் பெற்றுள்ளாா். இதன்மூலம் ஏற்பட்ட ஆா்வத்தில் மேலும், கடந்த ஜனவரி 3 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 428 தொகையை முதலீடு செய்துள்ளாா்.

ஆனால், அந்த பணத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, முழு பணத்தையும் எடுக்க மேலும் பணம் செலுத்த வேண்டும் என மோசடி கும்பல் கட்டாயப்படுத்தி உள்ளது.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த லாலு பிரசாத், உடனடியாக வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.