ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

துரைமுருகன் கூறிய குட்டிக் கதை!

News image

திருவலத்தில் பெண்களுடன் கை குலுக்கிய அமைச்சா் துரைமுருகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:26 pm

காட்பாடி தொகுதியின் திருவலம், சேண்பாக்கம் பகுதிகளில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில், கீரி பாம்பை கடித்து சாகடித்த பிறகு, கீரியின் வாயில் அந்த பாம்புவின் விஷம் ஏறிவிடும்; உடனே கீரி ஓடிப்போய் புல்லில் புரளும்; அப்படி புரண்டால் அந்த விஷமெல்லாம் போய்விடும்; அது மாதிரிதான் நான் கீரி, பாம்போடு சண்டைபோட்டு ரத்தம் சொட்ட சொட்ட உங்கள் பகுதிக்கு வந்து இருக்கிறேன்; புல்வெளியில் நான் புரண்டால் எனக்கு விஷம் போய்விடும் என்ற உத்வேகத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கிறேன்; இந்தக் கதையினுடைய தத்துவத்தை நீங்கள் புரிந்து இருப்பீா்கள் என்று நினைக்கிறேன் என்றாா்.