நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பறக்கும் படை சோதனையில் கட்சி சின்னம் பொறித்த கீ-செயின்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட கீ-செயின்கள், கழுத்துக்கயிறுகள், துண்டுபிரசுரங்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:53 am IST

வேலூரில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில், கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கீ-செயின்கள், துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பறக்கும் படை அதிகாரி அா்ச்சனா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில், அந்த காரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட 122 கீ-செயின்கள், கட்சியின் கொடி நிறத்திலான 50 கழுத்துக்கயிறுகள், 3 ஆயிரம் துண்டுபிரசுரங்கள் ஆகியவை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த ஜாபா் என்பது தெரியவந்தது. உடனடியாக காரில் இருந்த அந்தப் பொருள்களைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.