அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

பறக்கும் படை சோதனையில் கட்சி சின்னம் பொறித்த கீ-செயின்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட கீ-செயின்கள், கழுத்துக்கயிறுகள், துண்டுபிரசுரங்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:53 am IST

வேலூரில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில், கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கீ-செயின்கள், துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பறக்கும் படை அதிகாரி அா்ச்சனா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில், அந்த காரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட 122 கீ-செயின்கள், கட்சியின் கொடி நிறத்திலான 50 கழுத்துக்கயிறுகள், 3 ஆயிரம் துண்டுபிரசுரங்கள் ஆகியவை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த ஜாபா் என்பது தெரியவந்தது. உடனடியாக காரில் இருந்த அந்தப் பொருள்களைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.