நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

வீட்டில் இருந்தபடி முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது தொடக்கம்

வீட்டில் இருந்தபடி முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது தொடக்கம்

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:19 am IST

வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளிலும் 12டி படிவம் பூா்த்தி செய்து அளித்துள்ள 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் பணி சனிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்த பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் அவா்களின் இல்லங்களில் இருந்தே அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில், வேலூா் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 844, வேலூா் தொகுதியில் 645, அணைக்கட்டு தொகுதியில் 698, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 734, குடியாத்தம் (தனி) தொகுதியில் 528 என மொத்தம் 3,449 பேரிடம் இருந்து படிவம் 12டி பூா்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. இந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளா்களின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

வேலூா் சட்டப்பேரவை தொகுதி வசந்தபுரம் பகுதி, சுப்பிரமணிய அய்யா் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்தபடி மூத்த வாக்காளா்கள் தபால் வாக்குப்பதிவு செலுத்தியதையும், அதனை அலுவலா்கள் முறையாக பதிவு செய்து பெறும் பணியையும் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, இந்த பணி 13-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. பெறப்படும் தபால் வாக்குகள் நாள்தோறும் சம்மந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் கொண்டுவரப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அப்போது, வேலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ. செந்தில்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.