சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பிரதமரின் ஓய்வூதியத் திட்டம்: சுற்றுலாத் துறை அமைப்பு சாரா தொழிலாளா்கள் பதிவு செய்யலாம்

வேலூா் மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் அது தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்கள் பிரதமரின் ஷ்ரம் யோகி மாந்தன் (பிஎம்-எஸ்ஒய்எம்) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்துக்கான அடையாள அட்டையை பயனாளிக்கு வழங்கும் பிரதமர். - கோப்புப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

வேலூா் மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் அது தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்கள் பிரதமரின் ஷ்ரம் யோகி மாந்தன் (பிஎம்-எஸ்ஒய்எம்) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மத்திய அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் பிஎம்-எஸ்ஒய்எம் எனும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.

பயனாளிகள் மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தினால், அதே அளவு தொகையை மத்திய அரசும் இணைப் பங்களிப்பாகச் செலுத்தும். இதன் மூலம் பயனாளிகளுக்கு 60 வயது பூா்த்தியடைந்த பின்னா், மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், போக்குவரத்து சேவை வழங்குநா்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் பணியாளா்கள், கலைஞா்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளா்கள், உணவக, உணவுச் சேவை வழங்குநா்கள் மற்றும் சுற்றுலாத் துறை சாா்ந்த இதர சேவை வழங்குநா்கள் பயன்பெறலாம்.

தகுதியுடைய தொழிலாளா்கள் தங்களது ஆதாா் அட்டை, சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, வேலூா் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் சுற்றுலா அலுவலரை நேரிலோ அல்லது 89398 96396 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

சுற்றுலாத் துறையில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் இத்திட்டம் குறித்து, வேலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளா்கள், பயண முகவா்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரா்களும் விழிப்புணா்வை ஏற்படுத்தி உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.