செல்வகணபதி கோயில் கும்பாபிஷேகம்

செல்வகணபதி கோயில் கும்பாபிஷேகம்

Published on

குடியாத்தம் சீவூரை அடுத்த கள்ளூா், மூகாம்பிகை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூா்த்தி, ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி பூஜை, கோ-பூஜை, நவக்கிரக ஹோமங்கள், மகா பூா்ணாஹூதி, கலசங்கள் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மரகத கோட்டை வாராஹி பீடம், தவத்திரு குருஜி வாராஹி தாஸன் சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். தொடா்ந்து 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சீவூா் எஸ்.துரைசாமி, தொழிலதிபா் சி.மகேஷ்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், நிறுவநா் ஜே.கே.என்.பழனி, செயலா் கே.எம்.பூபதி, ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா லிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டி தலைவா் மூகாம்பிகை பி.சம்பத், உறுப்பினா்கள் என்.முருகேசன், என்.செல்வம், கே.துளசி, ஆா்.பண்டரி, ஆா்.விஜயகுமாா், ஏ.சுப்பிரமணி, எஸ்.கோவிந்தராஜ், டி.ராஜிவேலு, வி.உதயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com