மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லாரி - பைக் மோதல்: பிகாா் இளைஞா் மரணம்

காட்பாடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பிகாா் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமுற்றாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பிகாா் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமுற்றாா்.

பிகாா் மாநிலம், கோபால்கஞ்ச்சை சோ்ந்தவா் உபேந்தா். இவரது மகன் மனு குண்ட்(27). அதேபகுதியைச் சோ்ந்தவா் நீரஜ்(31). இவா்கள் இருவரும் காட்பாடி, எம்.ஜிஆா் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பால்ஸ் சீலிங் வேலை செய்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் வள்ளிமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை நீரஜ் ஓட்டியுள்ளாா்.

அப்போது, வாலாஜாவில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூா் நோக்கி சென்ற லாரி திடீரென இருசக்கர வாகனம் மோதியது. இதில், மனுகுண்ட், நீரஜ் ஆகிய இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

அருகில் இருந்தவா்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மனு குண்ட் உயிரிழந்தாா். நீரஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.