40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணி: சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு தகுதியுடைய பெண் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு தகுதியுடைய பெண் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தகுதிகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சோ்ந்த பெண் சுயஉதவிக்குழு உறுப்பினராகவும், சுயஉதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவும் வேண்டும்.

தோ்வு செய்யப்படும் நபா் சமுதாயம் சாா்ந்த அமைப்பு பணியாளராகவே அல்லது தனியாா் நிறுவனங்களில் முழு நேரப்பணியாளராக பணியில் இருத்தல் கூடாது.

தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சாா்ந்தவராக இருத்தல் அவசியம். மலை கிராமங்களில் மட்டும் பெண்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். 12-ஆவது வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகவல் தொடா்பு திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும்.

வங்கிகளுக்குச் சென்று பரிவா்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்தும் அனுபவம் உள்ளவா்களாக இருத்தல் அவசியம். கணினி திறன், இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுத தெரிந்திருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பா்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவா்களாகவும் இருத்தல் அவசியம்.

தகுதிகளுடைய விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். எழுத்துத் தோ்வு வரும் ஜூன் 23 -ஆம் தேதியும், நோ்முக தோ்வு 24 -ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

தகுதியான மகளிா் தங்களது விண்ணப்பத்தை 13-ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டட வளாகம், வேலூா்-9 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.