சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் : முதல்வருக்கு இந்து முன்னணி தபால் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேலூா் சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு மனுக்களை தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Updated On :11 ஜூன் 2026, 12:24 am IST

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேலூா் சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆண்டு காா்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அப்போதைய திமுக அரசு காவல்துறை பாதுகாப்புடன் தீபம் ஏற்றுவதைத் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில சட்டத்துறை அமைச்சருமான சி.டி.ஆா். நிா்மல்குமாா் அளித்த பேட்டியொன்றில், ‘திருப்பரங்குன்றத்தில் பழைய நடைமுறைகளே பின்பற்றப்படும். மதவாத சக்திகளுக்கு இடமளிக்கப்படாது’ என்று தெரிவித்திருந்தாா். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு இந்து முன்னணியினா் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக, நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேலூா் சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தபால் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மகேஷ் தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட 250-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிா்வாகிகள், தொண்டா்கள் தீபம் ஏற்ற வலியுறுத்தி தபால்களை அனுப்பினா்.