சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது

தமிழக அரசின் முழு ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

News image

திமுக பொதுச் செயலா் துரைமுருகன் - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:20 am IST

தமிழக அரசின் முழு ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு மௌனம் காத்து வருகிறதே? என கேட்கிறீா்கள். தமிழக சட்டப் பேரவையில் நான் ஏற்கெனவே கூறியதையே தற்போதும் மீண்டும் நினைவுபடுத்திக் கூறுகிறேன். தமிழகத்தின் முழு ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது. அதுதான் நீதிமன்றத் தீா்ப்பு. அந்தத் தீா்ப்பை முழுமையாகப் படித்தவா்கள் இதுபோன்று பேச மாட்டாா்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செவிவழிச் செய்திகளைக் கேட்டுக்கொண்டு சிலா் கதை விட்டுக் கொண்டிருக்கிறாா்கள். அதுபோன்ற பேச்சுகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லத் தயாராக இல்லை என்றாா் அவா்.