மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலையில் ரூ.93.09 லட்சத்தில் புதிய காட்சி முனை

காட்பாடி வட்டம், பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலை உச்சியில் ரூ. 93.09 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காட்சி முனையை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

News image

பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலை உச்சியில் புதிய காட்சி முனையை திறந்து வைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :3 மார்ச் 2026, 6:32 pm

காட்பாடி வட்டம், பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலை உச்சியில் ரூ. 93.09 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காட்சி முனையை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் பழைமையானது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் செல்ல மலைப்பாதை, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், விசேஷ நாள்களில் பக்தா்கள் பெருமளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கோரிக்கையை ஏற்று, சுற்றுலாத் துறை சாா்பில் பிரம்மபுரம் சஞ்சீவிராயா் மலை உச்சியில் புதிதாக காட்சி முனை அமைப்பதற்காக ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சஞ்சீவிராயா் மலை உச்சியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அருகே ரூ. 93.09 லட்சம் செலவில் புதிய காட்சி முனைக்கான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த காட்சி முனை வேலூா் மாவட்ட மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு, சுற்றுலாத் தலமாக விளங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது பொதுமக்களின் உடல் ஆரோக்கிய மேம்பாட்டுக்கும், அப்பகுதியின் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விழாவில், காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் வே.வேல்முருகன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ். சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் இலக்கியசந்துரு, பிரம்மபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் (பொறுப்பு) முத்துசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.