கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:27 pm

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ. 85 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிகளை வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

வேலூா் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ், ரூ. 85 லட்சம் நிதியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தரைதளம், முதல் தளம் என மொத்தம் 5 வகுப்பறைகள் கட்டப்படும் நிலையில், இதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் தலைமை வகித்து பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா். மேயா் சுஜாதாஆனந்தகுமாா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திமுக வட்ட செயலா் ஆனந்தகுமாா், பொதுப்பணித் துறை அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் பங்கேற்றனா்.