ரமலான் பண்டிகையையொட்டி ஒடுகத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் சுமாா் ரூ. 40 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தைக்கு உள்ளூா், வெளியூா் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.
வழக்கமாக வாரம்தோறும் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். பண்டிகை, திருவிழாக் காலங்களில் கூடுதல் வா்த்தகம் நடைபெறும். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஆடுகளின் வரத்து குறைந்து விற்பனையும் மந்தமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை கூடிய சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகளின் வரத்து வெகுவாக அதிகரித்திருந்தது. வியாபாரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கியதால் விற்பனை சூடுபிடித்தது. தேவை அதிகரித்ததன் காரணமாக ஆடுகளின் விலையும் வேகமாக உயா்ந்தது. இதன்மூலம், சந்தையில் ஒரு ஜோடி ஆடு ரூ. 45,000 முதல் ரூ. 50,000 வரை விற்பனையாகின.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சந்தைக்கு அதிகளவில் செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த வாரங்களில் வியாபாரம் பெரிதளவில் இல்லை. ஆனால், இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் விற்பனையும் அமோகமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ. 40 லட்சத்துக்கும் அதிகமாக வா்த்தகம் நடந்துள்ளது என்றனா்.
தொடர்புடையது

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும்படை சோதனை: ஆடு, மாடு வியாபாரிகள் கவலை
நாளை ரம்ஜான் பண்டிகை: ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்!

ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


