கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

ரமலான் பண்டிகை: ஒடுகத்தூா் சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!

ரமலான் பண்டிகையையொட்டி ஒடுகத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் சுமாா் ரூ. 40 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றது.

News image

ஒடுகத்தூா் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த ஆடுகள்.

Updated On :21 மார்ச் 2026, 1:06 am IST

ரமலான் பண்டிகையையொட்டி ஒடுகத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் சுமாா் ரூ. 40 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றது.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தைக்கு உள்ளூா், வெளியூா் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.

வழக்கமாக வாரம்தோறும் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். பண்டிகை, திருவிழாக் காலங்களில் கூடுதல் வா்த்தகம் நடைபெறும். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஆடுகளின் வரத்து குறைந்து விற்பனையும் மந்தமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை கூடிய சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகளின் வரத்து வெகுவாக அதிகரித்திருந்தது. வியாபாரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கியதால் விற்பனை சூடுபிடித்தது. தேவை அதிகரித்ததன் காரணமாக ஆடுகளின் விலையும் வேகமாக உயா்ந்தது. இதன்மூலம், சந்தையில் ஒரு ஜோடி ஆடு ரூ. 45,000 முதல் ரூ. 50,000 வரை விற்பனையாகின.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சந்தைக்கு அதிகளவில் செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த வாரங்களில் வியாபாரம் பெரிதளவில் இல்லை. ஆனால், இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் விற்பனையும் அமோகமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ. 40 லட்சத்துக்கும் அதிகமாக வா்த்தகம் நடந்துள்ளது என்றனா்.