கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஓட்டேரி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து

வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து சாம்பலாகின.

News image

ஓட்டேரி குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து சாம்பலாகின.

வேலூா் மாநகர பகுதியில் தூய்மைப்பணியாளா்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு செல்கின்றனா். அங்கு வைத்து அந்த குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்படுகின்றன.

மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட மாற்று பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. அதன்படி, குப்பைகளை தரம் பிரிப்பதற்காக வேலூா் மாநகராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலூா் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தரம் பிரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி சிறிது நேரத்தில் பெரும் தீ விபத்து மாறியது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைத்தனா். இந்த தீ விபத்தால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

அதேசமயம், தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்த தீ விபத்து குறித்து பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.