
குழந்தை பிறப்பை பதிவு செய்யாதவா்களுக்கு வாய்ப்பு: குடியாத்தம் நகராட்சி ஆணையா்
குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாதவா்கள் வரும் 26.09.2026-க்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Delhi University starts its first fully online admission process
குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாதவா்கள் வரும் 26.09.2026-க்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய வழங்கப்பட்டிருந்த காலக்கெடு 26.09.2026 அன்றுடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி, 01.01.2000-க்கு முன்பு அல்லது 01.01.2000-க்கு பிறகு பிறந்த குழந்தைகளின் பெயா் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளிலும், குழந்தையின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக ஏற்கெனவே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் வரும் 26.09.2026-க்குள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு பதிவுகளில் பெயா் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






