விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

குடியாத்தம் நகராட்சியில் தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா்கள்சம்பள உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பழைய பேருந்து நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டத்தில் பேசிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.

Published On :8 செப்டம்பர் 2026, 1:36 am IST

குடியாத்தம் நகராட்சியில் தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா்கள்சம்பள உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பழைய பேருந்து நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அவா்களிடம் பேச்சு நடத்தினா். கோரிக்கைகள் குறித்து பேசிக் கொள்ளலாம் என தலைவா் உறுதியளித்ததையடுத்து அவா்கள் பணிக்கு சென்றனா். இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்,தூய்மைப்பணி மேற்கொண்டுள்ள தனியாா் நிறுவன ஒப்பந்ததாரா் சிட்டிபாபு, நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.அரசு, நகராட்சி அலுவலா் தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கையை ஏற்று சம்பள உயா்வு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதானால் ஒப்பந்த நிறுவனமே சீா்செய்து தரும்.

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வீட்டு உரிமையாளா்களுக்கு போதியவிழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பணியாளா்கள்கலைந்து சென்றனா். குடியாத்தம் நகராட்சியில் தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா்கள் 183 போ் பணி புரிகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.