மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம்: ஏயுடி கோரிக்கை

கோவை, ஜன. 8: சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) வலியுறுத்தியுள்ளது. கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 64-வத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவை, ஜன. 8: சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) வலியுறுத்தியுள்ளது.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 64-வது மாநில மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  அரசு உதவிபெறும் கல்லூரிகளில் புதிய பாடவகுப்புகளைத் தொடங்குவதற்கான தடையை விலக்க வேண்டும். அதேநேரம் இக் கல்லூரிகளில் அதிகரித்துவிட்ட சுயநிதிப் பிரிவு வகுப்பைகளை நெறிப்படுத்தி, தேவையானவற்றை அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயநிதிக் கல்லூரிகளை முழுமையாக நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் கொண்டுவர, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தேசிய அளவில் உயர்கல்விக்கான அமைப்புகளை ஜனநாயகப்படுத்தாததே அவற்றின் செயல்பாடு குறைந்துபோகக் காரணமாக இருக்கிறது. ஆகவே, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் குழு அமைப்பது தேவையற்றது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

வணிக நோக்கம் கொண்ட பன்னாட்டு பல்கலை.களை இந்தியாவில் அவசரமாக அனுமதிப்பது பல்வேறு பாதிப்பைகளை ஏற்படுத்தும். இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு உயர்கல்வி பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகக் கூடாது.

ஒவ்வோர் ஆண்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் 6 சதவீதத்தை உயர்கல்விக்காக ஒதுக்குவது அவசியம்.

ஓய்வூதியம் பெற இயலாத கல்லூரி ஆசிரியர் பணி என்பது ஆசிரியப் பணியின் கண்ணியத்தையும், பற்றையும் குறைத்துவிடும். ஆகவே, மாநில அரசுகள் 2004 முதல் ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

 தமிழகத்தின் அனைத்துப் பல்கலை.களிலும் தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

உதவிபெறும் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாட வகுப்புகளைத் தொடங்க மானியஉதவி அளிக்க வேண்டும்.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமனம் செய்வது, மாணவர் சேர்க்கை விதிகளை மீறும் உதவிபெறும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் நடைமுறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.