கோவை,ஜன.8: இரண்டு குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீஸôர் தேடி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி வஉசி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஆல்பர்ட். இவரது மனைவி செல்வராணி( 29). இவர்களுக்கு ஒரு பெண்,ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று காலை ஆல்பர்ட் உள் அறையில் குளிக்கச்சென்றார். வெளிஅறையில் செல்வராணி தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயார்படுத்தி வந்தார். குளித்துவிட்டு வெளியில் வந்து பார்த்த போது செல்வராணி மற்றும் இரு குழந்தைகளை காணவில்லை என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.