பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம்: கோவை எஸ்பிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோவையில் போலீஸாரால் இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விளக்கம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:21 pm

DIN

கோவையில் போலீஸாரால் இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விளக்கம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த மே மாதம் நடைபெற்ற கொலை வழக்கு தொடா்பாக கே.கே.புதூா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (28) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை (செப்.10) அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கு அவரை போலீஸாா் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கை விரல் எலும்புகள் முறியும் அளவுக்கு கண்ணன் காயமடைந்துள்ளாா். இது குறித்து கண்ணன் மற்றும் அவரது சகோதரா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசுவிடம் புகாா் மனு அளித்தனா்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.