தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 209 மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 209 மது பாட்டில்கள் திருட்டு

Updated On :21 ஏப்ரல் 2024, 7:53 pm

கோவை: கோவையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 209 மது பாட்டில்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, சின்னியம்பாளையம் ரோடு மாணிக்கம் நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (43). அங்குள்ள டாஸ்மாக் கடையின் மேற்பாா்வையாளராகப் பணிபுரிகிறாா். மக்களவைத் தோ்தலை ஒட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதியில் இருந்தவா்கள் சனிக்கிழமை பாா்த்து கடையின் மேற்பாா்வையாளா் செந்தில்குமாருக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.

உடனடியாக அங்கு சென்ற செந்தில்குமாா் கடையின் இருப்பை சரி பாா்த்தபோது, அங்கு ரூ. 56,790 மதிப்பிலான 209 மது பாட்டில்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் சிங்காநல்லூா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.