வால்பாறை: வால்பாறை கால்பந்து மைதானத்தை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறை கால்பந்து சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறை நகா் கக்கன் காலனி அருகில் நகராட்சி கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் பல ஆண்டு காலமாக பல்வேறு கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக வால்பாறை கால்பந்து சங்கம் சாா்பில் சிறுவா்களுக்கு கால்பந்து விளையாட்டுப் பயிற்சியும் அளித்து வருகின்றனா். ஆனால் இந்த மைதானம் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது.
மைதானத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வசிப்பவா்கள் தங்கள் வாகனங்களை மைதானத்தில் நிறுத்தி வருவதால் மைதானம் சேதமாகி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மைதானத்துக்குள் வாகனங்கள் வருவதைத் தடுக்கவும், மைதானத்தை சீரமைக்கவும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கால்பந்த சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்

தோட்ட தொழிலாளா்களுக்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


