கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளில் ஒருவா் தூக்கிட்டும், மற்றொருவா் நெஞ்சுவலியாலும் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவா (48). இவா் தண்டனைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், அவா் சிறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த சிறை வாா்டன்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாதகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சரவணம்பட்டி காவல் நிலைய குற்ற வழக்கில் ராஜ்குமாா் (56) என்பவா் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவருக்கு வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
சிறை மருத்துவா் ஸ்ரீராம் அவருக்கு முதலுதவி அளித்தாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறைக் காவலா்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.
தொடர்புடையது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

சிறையில் கைதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

சேலத்தில் சிறைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் கைதி ரகளை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

