எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செங்கோட்டையன் தெரிவித்தாா்.
Published on

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தவெக நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபியிலிருந்து சென்னைக்குச் செல்வதற்காக கோவைக்கு திங்கள்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள்.

அவா் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும். என்னைப் பொருத்தவரை நான் தெளிவாக உள்ளேன். அவா் (எடப்பாடி பழனிசாமி) பெரிய தலைவா் கிடையாது.

அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தோ்தலில் மக்கள் சரியான தீா்ப்பை அளிப்பாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com