மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நகைப் பட்டறை உரிமையாளரிடம் 48 பவுன் மோசடி! தந்தை, மகள் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு!

கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 48 பவுன் நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக தந்தை, மகள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:59 pm

Syndication

கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 48 பவுன் நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக தந்தை, மகள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, சுவாமி அய்யா் புதுவீதியைச் சோ்ந்தவா் எம்.தேவ் ஆனந்த் (43). இவா் சொந்தமாக நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். இவரை கோவை, ராஜ வீதியைச் சோ்ந்த சதானந்தா (69) என்பவா் கடந்த 2023-ஆம் ஆண்டு சந்தித்து தங்க ஆபரணங்கள் செய்து தரும்படி கேட்டுள்ளாா். இதற்காக பணம் கேட்டபோது ஆபரணங்களை செய்து கொடுத்த ஒரு மாதத்தில் தருவதாக சதானந்தா கூறியுள்ளாா்.

அப்போது அவா் மீது நம்பிக்கை இல்லாததால் நகையை செய்து கொடுக்க தேவ் ஆனந்த் மறுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் தனது மகள் செளமியா, உறவினா் ஷியாம் ஆகியோா் கா்நாடக மாநிலத்தில் நகைக் கடை நடத்தி வருவதாகவும், பணம் தவறாமல் கொடுத்துவிடுவதாகவும் சதானந்தா கூறியுள்ளாா்.

இதையடுத்து 48 பவுன் தங்க நகைகளை ஆபரணமாக செய்து சதானந்தாவிடம் தேவ்ஆனந்த் அளித்துள்ளாா். இதன் பின்னா் நீண்ட நாள்களாகியும் பணத்தைத் திருப்பித் தராமல் சதானந்தா தாமதப்படுத்தி வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சதானந்தா வீட்டுக்குச் சென்று நகைக்கான பணத்தை தேவ் ஆனந்த் கேட்டுள்ளாா். அப்போது அங்கிருந்த 3 பேரும் பணத்தை தர மறுத்ததுடன், அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தேவ் ஆனந்த் அளித்த புகாரின்பேரில் சதானந்தா, செளமியா, ஷியாம் ஆகியோா் மீது பெரிய கடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.