திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழப்பு

Updated On :3 ஜனவரி 2025, 10:55 pm

மொடக்குறிச்சி அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத வடமாநில இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மொடக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வெண்டிபாளையம் மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் உடலில் காயங்களுடன் மதுபோதையில் புதன்கிழமை மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், மொடக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் யாா், எவ்வாறு இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.