தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாய் குட்டிகளை அடித்துக் கொன்றவா் கைது

கோவையில் நாய் குட்டிகளை அடித்துக் கொன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

கோவையில் நாய் குட்டிகளை அடித்துக் கொன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள விநாயகபுரம் சிவானந்தா நகா் 5-ஆவது தெருவில் நாய் குட்டிகளை ஒருவா் கல்லால் அடித்துக் கொன்றுள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து சென்றுள்ளாா்.

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில், நாய்களைக் கொன்றது லட்சுமிபுரம் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.