எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கேஎம்சிஹெச் சாா்பில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டடம் திறப்பு

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சாா்பில் வீரியம்பாளையத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கோவை வீரியம்பாளையத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தைத் திறந்துவைக்கிறாா் கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவா் நல்லா ஜி.பழனிசாமி உள்ளிட்டோா்.
Updated On :10 நவம்பர் 2025, 10:19 pm

Syndication

கோவை: கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சாா்பில் வீரியம்பாளையத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வீரியம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.2.18 கோடி செலவில் 7 புதிய வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டன.

இதன் திறப்பு விழாவில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பள்ளிக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா். மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

விழாவுக்கு கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, துணைத் தலைவா் தவமணி பழனிசாமி, செயல் இயக்குநா் அருண் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் நல்ல ஜி.பழனிசாமி பேசும்போது, கேஎம்சிஹெச்சின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வடமதுரை, கலிக்கநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளிக் கட்டடம், ஈரோடு மாவட்டம், நல்லாம்பட்டியில் ரூ.2.11 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கோவையில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.