எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தினமணி செய்திச் சேவை

கோவையில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்காநல்லூா் அருகே உள்ள வசந்த நகரைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ தேவசி (53). இவா் குஜராத் மாநிலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். கோவைக்கு வந்திருந்த ஆண்ட்ரூ தேவசி ராமநாதபுரம் பகுதியில் உள்ள மீன் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றாா்.

திருச்சி சாலையில் உள்ள அந்தக் கடையின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாா். மீன் வாங்கிவிட்டு அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மடிக்கணினி திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் அவரது மடிக்கணினியைத் திருடியது ராமநாதபுரத்தை சோ்ந்த நாகராஜ் (62) என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்து, மடிக்கணினியை மீட்டனா்.